
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 180 கோடி ரிங்கிட் உதவி நிதியானது ஜூன் மாத வாக்கில் 200 கோடி ரிங்கிட்டாக உயரும் என கணிக்கப்படுவதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் Mat Sabu (முகமட் சாபு) தெரிவித்தார்.
கோழி தீவணத்தின் விலையேற்றத்தை அரசு அணுக்கமாகக் கண்காணிப்பதாகவும் அது சீராக நிலை நிறுத்தப்பட்டால், வழங்கப்படும் உதவிநிதி மீட்டுக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர் அது சம்பந்தமாக ஜூன் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பாதிப்பில்லாதவையா என்பதை உறுதி செய்ய அணுக்கமாகப் பரிசோதித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
