
🔊To listen to this news in Tamil, Please select the text.
நீதிபதி நஸ்லான் கஸாலி மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்து, அவர் தொழில் நெறிமுறையை மீறியுள்ளதாகக் கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது அதிகப்பட்சமானது என்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் என்றும் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் சாடியுள்ளார்.
ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் நீதிபதி மீது விசாரணையை நடத்த ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்தது யார் என்றும் தலைமை நீதிபதியின் அனுமதியின்றி விசாரணை நடத்தியது தவறாகும். சட்டத்துறையின் மீது நிர்வாக செயலாக்கத் தரப்பினரின் அத்துமீறல் என்றும் வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா குறிப்பிட்டார்.
