
🔊To listen to this news in Tamil, Please select the text.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு தீபகற்ப மலேசியாவில் இருந்து சபா, சரவாக்கிற்கு கூடுதலாக 527 விமானப் பயணங்களை மாவ்கோம் எனப்படும் மலேசிய வான்வெளி ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதில் மலேசிய ஏர்லைன்ஸ், பாத்திக் ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, ஃபயர் ஃபிளை, மாஸ்விங்ஸ் மற்றும் மை ஏர்லைன்ஸ் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன.
மலேசிய ஏர்லைன்ஸ் 184 கூடுதல் பயணங்களையும், பாத்திக் ஏர் 173, ஏர் ஆசியா 130, ஃபயர் ஃபிளை 18, மாஸ்விங்ஸ் 12, மை ஏர்லைன்ஸ் 10 கூடுதல் பயணங்களையும் மேற்கொள்ளும். இவை யாவும் வழக்கமான 2,033 பயணங்களுக்குக் கூடுதலானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
