
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜொகூர், பாசிர் குடாங்கில் ஒரு வாகனத்திற்குள் 17 வயது பெண்ணும் 22 வயது இளைஞனும் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி, அவர்களைக் கைது செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சிறார்களின் உரிமைகளைப் பாதுகாக்க தவறிவிட்டதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
சிறார் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாளுவதில் அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் நான்சி சுக்ரி மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த அமைச்சகத்தின் துணை அமைச்சர் அய்மன் அதிரா சாபு, இது குறித்து கருத்து கூறுகையில், சிறார்களின் இத்தகைய சிறு குற்றங்களுக்கு அவர்களை எச்சரித்தால் போதுமானது; கைது செய்வது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
