
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் நேற்று காலையில் சாலை போக்குவரத்துத்துறையின் சாலை தடுப்பு சோதனையின்போது அதன் அதிகாரி ஒருவரைத் தனது மோட்டார் சைக்கிளினால் மோதித் தள்ளிய 25 வயதுடைய நபரை சிரம்பான் போலீசார் கைது செய்தனர். அந்த மோட்டார்சைக்கிளோட்டியிடம் ஒட்டுனர் உரிமை இல்லையென்பதோடு அவரது மோட்டார்சைக்கிளின் சாலை வரியும் காலாவதியாகியிருந்ததாக போட்டிக்சன் போலீஸ் தலைலர் சூப்ரிடெண்டன்
ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.
அந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த சந்தேக நபர் போதைப் பொருள் உட்பட எட்டு குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். இதனிடையே இச்சம்பவத்தில் சாலை போக்குவரத்துத்துறையின் அதிகாரி கால் மற்றும் கையில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டதாக ஐடி ஷாம் கூறினார்.
