
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் காரை பரிசோதனை செய்த சம்பவம் தொடர்பில் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதை சந்திக்கத் தயாராக இருப்பதாக கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனுசி தெரிவித்தார். விதிமுறையை நான் மீறி இருந்தால் அதற்கான நடவடிக்கையை சந்திக்கத் தயார்.
இந்த விவகாரத்தில் நான் செய்தது சரியா அல்லது தவறா என்பதை எனது ஆதாரவாளர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். மாறாக நெட்டிசன்கள் அல்ல.
நான் தவறு செய்யவில்லை என்று கூறவில்லை. sop மீறினால் அது கடுமையானது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
