
மலேசியாவில் சரவாக், பெத்திங் பாத்திங்கி அலி அருகே, ஒரு சீனக் கடலோரப் பகுதிகளில் சீனாவின் காவல்படை கப்பல்கள் தென்பட்டன.
இந்த பகுதியில், கடந்த வாரத்தில் 16 சீனப் போர் விமானங்கள் பறந்தன.
இப்பொழுது மிரி கடற்கரையில் இருந்து 84 கடல் மைல் (155 கி.மீ.) தொலைவில், மலேசியக் கடலுக்குள் நுழைந்தது சீனா கப்பல்கள் நுழைந்திருக்கிறது
என்று தி போர்னியோ போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஜூன் 4-ஆம் தேதி, சீனக் கடலோரக் காவல்படை நம் கடல் பகுதிக்குள் நுழைந்தது குறித்து எங்களுக்கு ஓர் அறிக்கை வந்தது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
மலேசியக் கடல்சார் அமலாக்க நிறுவனமும் (ஏபிஎம்எம்) அரச மலேசியக் கடற்படையும் (திஎல்டிஎம்) நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன,” என்று மிரி ஏபிஎம்எம் இயக்குநர் முகமட் பாவ்சி ஓத்மான் தெரிவித்தார்
