
வரும் ஜூலை மாதம் முதல் தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
நாட்டில் தடுப்பூசியை பெற்று கொள்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.
அந்த வகையில் ஜூலை மாதத்தில் தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் இருக்கிறது என்றார் அவர்.
