
தடுப்புக் காவல் கைதிகள் மரணமடையும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார் .
இந்த விவகாரத்தில் போலீஸ் படை கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மலேசிய போலீஸ் படைத் தலைவராக டத்தோஸ்ரீ அக்ரில் சானி நியமிக்கப்பட்டுள்ளார். மரியாதை நிமித்தமாக டத்தோஸ்ரீ அக்ரில் சானியை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சந்தித்து பேசினார்.
அப்போது காவல் கைதிகள் மரணம் தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்திய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இதில் போலீஸ் துறை கூடுதல் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார்.



