
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சமீப காலமாக சிலர் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்தும் பிரச்சனை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
🔹 “வெறுப்பை பரப்ப ஒதுக்கி, பள்ளிவாசல்களை அறிவை வளர்க்கும் மையமாக மாற்றுங்கள்” என அவர் வலியுறுத்தினார்.
🔹 பெண்கள், இளைஞர்களுக்கான கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக மசூதிகளை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.
🔹 அல் குர்ஆன், நபிகள் நாயகத்தின் போதனைகளை உண்மையான முறையில் புரிந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
📍 இந்த கருத்துக்களை அவர் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஜமேக் பெராய் மசூதி திறப்பு விழாவில் பேசிய போது வெளியிட்டார்.
