
அடுத்த பிரதமராக தாம் முன்மொழியப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்களில் உண்மையில்லை என்று டத்தோஸ்ரீ இஷாமுடின் கூறினார்.
எனக்கு எதிராக அரசியல் சதித் திட்டமாக இந்த வதந்திகள் இருக்கலாம்.இதைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர் சொன்னார்.
நான் பிரதமர், அஸ்மின் அலி துணைப்பிரதமர் என்று தி வீப்ஸ இணையதளம் செய்தியை வெளியிட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலகுவார். அவருக்கு பதில் பிரதமராக இஷாமுடின் பதவியேற்பார் என்று அந்த இணையதளம் செய்தியை வெளியிட்டுள்ளது.. இதுபற்றி கருத்துரைத்த இஷாமுடின் இதில் உண்மை இல்லை என்றார்.
