
விபத்தில் பாதிக்கப்பட்டு வேலையேதும் செய்ய முடியாமல் வருமானமின்றி
சிரமப்படும் தாமான் பாகான் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த சரத்குமாருக்கு பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி உடனடி உதவியை வழங்கினார்.
இவரின் சிரமம் குறித்து தகவலறிந்த அவர்,நேரில் சென்று சக்கர நாற்காலியும்,உதவிப் பொருட்களையும் வழங்கினார்..
மேலும் இவரின் குடும்பத்துக்கு தமது சட்டமன்ற சேவை மையத்தின் மூலம் அரசாங்கத்தின் சமூகநல உதவிகளை பெற ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சொன்னார்.
