
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாட்டில் 12 லட்சத்து 67 ஆயிரத்து 758 பேருக்கு இரண்டு தடுப்பூசியை போடப்பட்டிருந்த பாக் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
28 லட்சத்து 35 ஆயிரத்து 178 பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
முதலாம் தடுப்பூசி மற்றும் இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 41 லட்சத்து 2 ஆயிரத்து 936ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூரில் 165,516 பேரும் சவராவில் 130,641 பேரும் கோலாலம்பூரில் 118,255 பேரும் ஜோகூரில் 117,725 பேரும் பேராக்கில் 155,298 பேரும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
