
இந்த கோவிட் காலகட்டத்தில் பல குடும்பங்கள் வருமான பாதிப்பினால் அவதிபடுவதை கருத்தில் கொண்டு,அந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் இது என சமூக ஆர்வாளரும் ஜொகூர் மாநில ஜசெக முக்கிய தலைவர்களில்
ஒருவரான திரு ஆ.சந்திர சேகரன் , கூறினார்.
அந்த வகையில் நேற்று இங்கு உள்ள தாமான் புத்திரி வங்சா பகுதியில் உள்ள சில குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
அந்த தொகுதியின் ஜசெக கிளை தலைவி சாந்தி சுரேஷ் மூலம் அடையாளம் காணபட்ட அந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
