25.3 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது!

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா, ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உரையாற்றிய போது, “ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் சிறந்த கல்வி, கட்டுப்பாடு மற்றும் கடமை உணர்வை ஊக்குவிக்கிறது. இதனால் மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுகிறார்கள்,” என்று தெரிவித்தனர்.

“பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு பெற்றோர் ஊக்கமும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் துணை நிற்கின்றன. எங்கள் கனவு பட்டதாரி ஆகுவதுதான். இந்தக் கனவை நிறைவேற்றும் உயர்தர கல்வி மையமாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் திகழ்கிறது,” என்றும் அவர்கள் கூறினர்.

விழாவின் முடிவில், தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு, கல்வி நிலையத்தின் மாணவர்பணி மற்றும் பெற்றோர் நம்பிக்கையின் மறுவிளைவாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles