
நாடறிந்த சமூக சேவையாளரும் பிரபல தொழிலதிபருமாகிய ஓம்ஸ் தியாகராஜன் அவர்களின் பிறந்த நாள் விழா கில்லானில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டத்தோ ரவி, டத்தோ பெரியசாமி, காஜான் கலை, பூச்சோ முரளி உட்பட ிலான் அரசியல் தலைவர்களும், நண்பர்களும் தொழிலதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு உரையாற்றிய ஒம்ஸ் தியாகராஜன், எனது பிறந்த நாளிற்கு நேரில் வந்து வாழ்த்தியவர்களுக்கும், பத்திரிகை வாயிலாகவும் தொலைபேசியில் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் தமிழ் மலர் பத்திரிகையின் சார்பில் வருகை தந்த நிர்வாகி மதியழகன், விளம்பர பி பிரிவை சேர்ந்த ஆசைத்தம்பி மற்றும் மோகனா, ஏஎஸ்டி இணைதளம் சார்பில் வருகை தந்த முருகன் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

எனது மக்களுக்கான சேவைகள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெறும். இந்திய சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்து எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
