
உறுமி மேல கலைஞர்களின் கைவண்ணத்தில் கங்கை அம்மன் பக்தி பாடல் அறிமுக விழா பெட்டாலின் ஜெயா எல்லப்பஸ் திரையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு உறுமி மேல கலைஞர்களும் இதில் பங்கு பெற்ற இளைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இவர்கள் ஏற்கனவே ஒரு ஆல்பம் தயாரித்து உள்ளார்கள் இப்பொழுது தனிப்பாடலாக இந்த பக்தி பாடலை உருவாக்கியுள்ளார்கள். உறுமி மேல கலையை பாரம்பரியமாக கற்று நாடு தழுவிய அளவில் கோவில்களிலும் திருவிழாக்களிலும் புகழ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த பக்தி பாடலை உருவாக்கி உள்ளனர். அனைவரும் ஆதரவு கொடுங்கள் இதனை யூடியுப் வழியாகவும் இளைய தளம் வழியாகவும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

