
கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பாபா சென்டரில் அண்மையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில், கண்ணன் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

அவர் உரையாற்றியபோது, “நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை. பாபா போல யாரும் இருக்க முடியாது; அவர் கடவுள் மட்டுமல்ல, மனித பிறவியாக எல்லோருக்கும் துணை நிற்பவர். பாபாவை என்றும் வணங்கி, நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்வது வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும்,” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்றோர் அனைவரும் பாபா தத்துவங்களை பின்பற்றுவோம் என்று உறுதியெடுத்தனர்.
