
இன்று உலகம் முழுவதும் நபிகள் நாயகத்தின் (ஸல்) பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மீலாதுன் நபி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
அந்த வகையில், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இடாயா மாஜூ உணவக உரிமையாளர் டத்தோ அலி தேநீர் மற்றும் பலகாரங்களை வழங்கி உபசரித்தார்.
மேலும், கெபிமா இயக்கத்தின் ஆலோசகர் முகமது பின் காதீர் அலியும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
