
கோவிட் 19 நோய்தொற்று கண்ட 135 அந்நிய நாட்டு தொழிலாளர்களை ஒரே லோரியில் ஏற்றிச் சென்ற சம்பவம் தொடர்பில் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அபராதம் விதித்திருப்பதாக கெடா கோலாமூடா மாவட்ட போலீஸ் தலைவர் அட்லிசி தெரிவித்தார்.
கையில் இளஞ்சிவப்பு வில்லை அணிந்த 135 நோய்த்தொற்று கண்ட அந்நியத் தொழிலாளர்களை கோழி இறைச்சி தொழிற்சாலையிலிருந்து லோரியில் ஏற்றிச் சென்ற சம்பவம் அம்பலமானது.
கெடா சுங்கை பட்டாணி பெடோங் சுங்கை லாலாங் என்ற இடத்தில் கோவிட் தொழிலாளர்களை ஏற்றி சென்றபோது போலீஸார் அந்த லோரியை தடுத்து நிறுத்தினார் என்று அவர் கூறினார்.



