
வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் நிகழ்ந்த தகராற்றை தடுக்கச் சென்ற சக நண்பர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.
.திங்கட்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தென் செபராங் பிறை,சுங்கை ஜாவி,தாமான் டேசா ஜாவி அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 35 வயது லோரி ஓட்டுநரான அ.ஹரிந்தரரூபன் என தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்காக 27 வயது ஆடவரை கைது செய்துள்ளதாக தென் செபராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ சோங் செர்ன் கூறினார்.
