
மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று சூளுரைத்தார்.
நான் இன்னும் திவாலாகவில்லை. என்னை திவாலாக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எக்காலத்திலும் நான் உடைந்து விடமாட்டேன். மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று அவர் சூளுரைத்தார்
தனக்கு எதிரான RM1.69 பில்லியன் வரி தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தடுத்து நிறுத்துவதில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.), முன்னாள் பிரதமருக்கு எதிரான திவால் அறிவிப்பைத் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
