
மாட்சிமைத் தங்கிய மாமன்னரை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் யாசின் இன்று மீண்டும் சந்தித்தார்.
இன்று பிற்பகல் 2.20 மணிக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இஸ்தானா நெகாரா வந்தடைந்தார்.
கடந்த வாரம் புதன்கிழமை மாமன்னரை பிரதமர் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அரசியல் நிலவரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாமன்னரை சந்தித்துள்ளனர்.
நாளை ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நடைபெறும் வேளையில் மாமன்னரை பிரதமர் இன்று சந்திப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
