27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

பசார் போரோங்கில் சண்டை!

செலாயாங் பசார் போரோங்கில் நடந்த சண்டை தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பெ இங் லாய் தெரிவித்தார்.
இங்கு வேலை செய்யும் தொழிலாளர் இடையே நடக்கும் சண்டை சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
காய்கறி வண்டிகளை தள்ளி செல்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இந்த சண்டை நிகழ்ந்திருக்கிறது என்று விசாரணையில் தெரிய வருகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் சென்றபோது அங்கு நிலைமை அமைதியாக காணப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாரும் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. இருப்பினும் நோய் தொற்று காலகட்டத்தில் எஸ்ஏபி விதிமுறைகளை மீறியதால் இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles