
மூன்றாவது கட்ட தேசிய எழுச்சி திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் நாடாளுமன்றம் கூடலாம் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்.
3ஆவது மீட்சி திட்டத்தின் கீழ் நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை 2,000 ஆக குறையும். மேலும் 40 விழுக்காடு மக்களுக்கு முழுமையான தடுப்பூசி போடப்பட்டு விடும்.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கடுமையான விதிமுறைகளுடன் நாடாளுமன்றம் கூடலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நோய்த்தொற்று தாக்கத்தினால் நடத்த உத்தரவு காலத்தில் நாட்டுக்கு தினசரி 100 கோடி வெள்ளி இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
