
அரசாங்கத்தின் நிலையான அறிவிப்பு இல்லாததால் கடைகளை திறக்க பல பூ வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.பூக்கடைகளை திறக்கலாம் என அரசாங்கம் அனுமதி வழங்கி விட்டதாக அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.,சரவணன் அண்மையில் அறிவித்தார்.
இருப்பினும் கடைகளை எப்போது திறக்கலாம்,அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஏதாகிலும் வழங்கப்படுமா என நிபோங் திபாலைச் சேர்ந்த வி.எல் பூக்கடை வியாபாரியான விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பினார்.அரசாங்கம் அறிவித்துள்ளபடி கடைகளை திறப்பது முக்கியமல்ல.கேமரன் மலையிலிருந்து எங்களுக்கு தொடர்ந்து பூக்கள் கிடைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்க வேண்டுமென இங்கு தாமான் சிந்தாரில் பூக்கடை வைத்திருக்கும் கெங்காதேவி உட்பட மேலும் பல பூ வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.
