
சிலாங்கூர் மாநிலத்தில் தொழில்துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கும் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் சரிவை எதிர்நோக்குவதை தவிர்க்க தொழில்துறை சார்ந்த ஊழியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிலாங்கூர் அரசு கவனம் செலுத்தும்.
மாநிலத்தின் மேம்பாட்டிற்கு முக்கியப் பங்கினை ஆற்றும் காரணத்தால் அத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தொழில்துறைகள் வீழ்ச்சி கண்டால் முதலாளிகளுக்கு மட்டும் இழப்பு ஏற்படாது, மாறாக தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று அவர் சொன்னார்
