27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

நாடாளுமன்றத்தை கூட்டும் தேதியை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமரிடம் உள்ளது

நாடாளுமன்றத்தை கூட்டும் தேதியை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமரிடம் உள்ளது என்று நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹர் அஸிஷான் தெரிவித்தார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆட்சியாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தை எந்த தேதியில் கூட்டுவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றம் கூட்டப்படலாம் என்று பிரதமர் அறிவித்துள்ளார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles