
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி நலமுடன்
இருப்பதாகவும்,அவர் இறந்து விட்டதாக இன்று காலை முதல் சமூக
வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என அவரது
அலுவலகம் தெரிவித்தது.
வழக்கம் போல அவர் தமது குடும்பத்தினருடன்
மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அந்த அலுவலகத் தகவல் மேலும்
தெரிவித்தது.கடந்தாண்டு மூன்று முறையும்,இவ்வாண்டு ஒரு முறையும்
இதுபோன்ற பொய்யான தகவல் பரப்பப்பட்டது.இனிமேல் இதுபோன்ற
உண்மையற்ற தகவல் வெளியிடப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவரின் அலுவலகம் தெரிவித்துக்
கொண்டது.
