27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

தக்குயூடினுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்!

பிரதமர் துறை அமைச்சர் தக்குயூடினுக்கு எதிராக போலீசார் விசாரனை மேற்கொண்டு வருவதாக போலீஸ் படை தலைவர் அக்ரில் சனி அப்துல்லா தெரிவித்தார்.
இவருக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியிருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார்.
தேவைப்படுமானால் விசாரணைக்கு உதவ சம்பந்தப்பட்டவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தை கூட்டும் படி மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் மலாய் ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால் எந்த தேதியில் நாடாளுமன்றத்தை கூட்டுவது என்று மாமன்னர் அறிவிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் பேசியிருப்பது மாமன்னரை உதாசீனப்படுத்தும் செயல் என்று அமானா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஷானி முனிர் போலீஸ் புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles