
நாடாளுமன்றத்தை கூட்டும்படி பக்காத்தான் தலைவர்கள் வலியுறுத்தி கொண்டிருப்பது அரசியல் மிருகங்களுக்கு சமம் என்று பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் முகமட் பைஸ் பேசி இருப்பதை கெஅடிலான் கட்சி இன்று வன்மையாக சாடியது.
பகாங் மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் முகமட் முஸ்தாக்கிம் கூறுகையில் ஆட்சியாளர்கள் மன்றத்தின் முடிவுக்கு சவால் விடுவதைப் போல் உள்ளது என்றார்.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆலோசனைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தை கூட்டுகள்.தவறினால் பதவி விலகும்படி பிரதமரை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் வலியுறுத்தி கொண்டிருப்பது அரசியல் மிருகங்களுக்கு சமம் என பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் முகமட் பைஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
