
நாட்டின் நீரழிவு நோயினால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார் மலேசியாவில் இந்த நீரழிவு நோய்க்கு 39 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பதாக அவர் சொன்னார்.
சீனியை அதிக அளவு பயன்படுத்துவதால் இளம் மலேசியர்களும் இதில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் எச்சரித்தார்.
தற்போது நாட்டில் 36 லட்சம் மலேசியர்கள் நீரழிவு நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நோய்த்தொற்று தாக்கம் ஒருபுறமிருக்க நீரிழிவு நோயாளிகள் பிரச்சனையும் மிக மோசமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
