
சுபாங் சாலையில் அமைந்திருந்த அகோர வீரபத்திரர் ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுபாங் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த ஆலயம் இன்று காலை அமலாக்க அதிகாரிகளால் உடைக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகோர வீரபத்திர காளியம்மன் ஆலயம் என்ற பெயரைக் கொண்டுள்ள இவ்வாலயம் இங்க பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
அரசாங்க நிலத்தில் இந்த ஆலயம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கிறது என்ற காரணத்திற்காக அது உடைக்கப் படுகிறது என்று சிலாங்கூர் நில இலாகா அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் இந்த ஆலயத்தை
உடைத்தது ஏன் என்று
கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
