
நோய்ததொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜோகூர் யோங் பெங் தாமான் மேவா வட்டாரத்தில் உள்ள 70 இந்தியக் குடும்பங்களுக்கு இன்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
யோங் பெங் சட்டமன்ற உறுப்பினர் சியூ பெக் சூ ஏற்பாட்டில் இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டதாக தாமான் மேவா ஜசெக தலைவர் சண்முகவேல் தெரிவித்தார்.
இங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை யோங் பெங் சட்டமன்ற உறுப்பினரின் சார்பில் வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
