
மாட்சிமை தங்கிய மாமன்னர் உத்தரவுக்கு ஏற்ப நாடாளுமன்றத்தை கூட்டும் படி கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம் கேட்டுக்கொண்டார்
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தாமதப்படுத்துவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் நாட்டை வழி நடத்த முடியாமல் தடுமாறும் அரசாங்கம் சட்டத் துறை தலைவர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தாமதப்படுத்துவதற்கான நகர்வுகளை வலுவான திட்டமிடலுடன் முன்னெடுத்து வருவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
