
மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திக்கும்படி நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹர் மற்றும் மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 29ஆம் தேதி காலை பதினொரு மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் இந்த சந்திப்பு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
