
தடைப்பட்டுப் போன 14 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான பணிகளை தொடர கல்வியமைச்சு உறுதி அளித்திருப்பதாக ம இ கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் டாக்டர் ரட்சி ஜீடினுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் இந்த 14 தமிழ்ப்பள்ளிகள் குறித்து பேசப்பட்டன.
14 தமிழ்ப்பள்ளிகள் புதுப்பிக்கும் பணி ஏற்கெனவே குத்தகை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கான ஒதுக்கீட்டை விரைந்து அதிகரிக்க கல்வியமைச்சு முன்வர வேண்டுமென தாம் விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்கு கல்வி அமைச்சர் ஒப்புதல் வழங்கி இருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே மெட்ரிகுலேஷனில் இந்திய மாணவர்களுக்கு 2,200 இடங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக அவர் சொன்னார்.
