
MCO எனப்படும் மக்கள் நடமாட்டம் உத்தரவு நாளையுடன் முடிவடையவில்லை. அது மேலும் தொடரும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மீட்சி திட்டத்தின் கீழ்
நாட்டில் கோவிட் நோய்தொற்று எண்ணிக்கை 4 ஆயிரமாக குறைய வேண்டும்.
அதுவரை இந்த மக்கள் நடமாட்டம் உத்தரவு தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் நாளை திங்கள் அல்லது செவ்வாய்கிழமையில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பல உதவி திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
