
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தும்படி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கேட்டுக் கொள்ளப்படுவார் என்று மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் இன்று அறிவித்தார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை ஐந்து நாட்களுக்கு நடத்தும் படி பரிந்துரை செய்வோம்.
அதன் பின்னர் ஆகஸ்டு மாத இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தும்படி கேட்டுக் கொள்வோம் என்றார் அவர்.
மாட்சிமை தங்கிய மாமன்னரை நேற்று இஸ்தானா நெகாராவில் நாடாளுமன்ற சபாநாயகர், மேலவைத் தலைவர் மற்றும் இரு துணை சபாநாயகர்கள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டும் படி மாமன்னர் மீண்டும் கட்டளை பிறப்பித்துள்ளார் என்றார் அவர்.



