
நோய்த்தொற்று அதிகமாக இருப்பதால் சிப்பாங் சுங்கை லீனாவ் தோட்டத்தில் மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பில் காணொளிகள் வைரல் ஆனது.
பக்கத்தான் ஹரப்பான் மற்றும் ம இ கா தலைவர்கள் இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க ஒருவர் மட்டுமே வெளியே செல்ல இப்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சுங்கை லீனாவ் தோட்ட பட்டாளிகளுக்கு தேவையான உணவு பொருட்களை சிப்பாங் கவுன்சிலர் சிவகுமார் மற்றும் சிப்பாங் மஇகா தொகுதி தலைவர் வி. குணாளன் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

