
நாட்டில் இன்று புதிதாக 7,654 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கடந்த ஜூன் 5ஆம் தேதி நாட்டில் 7,000 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இப்போது மீண்டும் அதிக அளவில் நோய்த்தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 3,260 பேர் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அவர் சொன்னார்.
