
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தில் நீடிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து நாளை அம்னோ முடிவெடுக்கிறது என்று கூறப்படுகிறது.
நாளை அம்னோ உச்ச மன்றக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பக்காத்தான் ஹரப்பான் ஆட்சிக்கவிழ்ப்பு பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் ஆட்சியை அமைத்தது.
இந்த அரசாங்கத்தில் அம்னோ முக்கிய அங்கம் வகிக்கிறது.
இருப்பினும் அம்னோ மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கிடையே உட்பூசல் முற்றி உள்ளது.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவை மீட்டுக் கொள்வது என்று அம்னோ உச்ச மன்றம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நாளை தீர்க்கமான முடிவு எடுக்கப்படலாம் என்று அம்னோ வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.
