
ஒப்பந்த கால மருத்துவர்களின் சேவையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
வரும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி வரை இவர்களது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யூடி 43 பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் மேலும் ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அவர்களது ஒப்பந்தத்தை தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
