
பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் பயனீட்டாளர்கள் ஆகியோரின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிக்கு செய்யும் பொருட்டு,கோவிட் – 19 தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென கெடா பாடாங் செராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா தெரிவித்தார்.
தற்போது நாட்டில் இந்நோய் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது.இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல்,பொது மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு,பொது சந்தைக்கு வரும் மக்களின் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்தி,வியாபாரிகளும்,பயனீட்டாளர்களும் தடூப்பூசி செலுத்திக் கொள்வதை அரசாங்கம் உறுதிபடுத்தி கொள்ளவது அவசியம் என்றார்.
இதனால் தினந்தோறும் மக்கள் அதிகமாக கூடும் சந்தைகளில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமென அவர் தெரிவித்தார்
