
தோக்கியோ ஓலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி மீராபாய் வெள்ளி வென்றார்.
210 கிலோ எடையை தூக்கி சீனா வீராங்கனை ஹோ சி ஜூய் தங்கப்பதக்கம் வென்றார்.
கடந்த 2000இல் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் ஏடை தூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றார் இந்தியாவின் கர்ணம் மல்லேஸ்வரி.
இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் எடைதுதூக்கும் போட்டியில் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
