
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி உட்பட 35 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோய் தொற்று இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா மற்றும் கிளாந்தான் பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்டோ நிக் அப்துல் அஜிஸ் ஆகியோருக்கும் நோய்த்தொற்று கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் வேளையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது
