
காரில் கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் நடத்தப்பட்டது தொடர்பில் மேலும் ஆறு பேரிடம் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து மூன்று தினங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட 37 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக இவர்களின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ராஜ் சூரியன் பிள்ளை தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் நாடு தழுவிய அளவில் கார் மூலம் கருப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
