25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

அவசரகால உத்தரவை மீட்டுக் கொள்வதில் அனுமதி பெறவில்லை! மாட்சிமை தங்கிய மாமன்னர் வருத்தம்

அவசரகால உத்தரவு மீட்டுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் மாமன்னரின் அனுமதியைப் பெறவில்லை என்று இன்று இஸ்தானா நெகாரா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஜூலை 21 ஆம் தேதியோடு இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் நாடாளுமன்றத்தில் செய்த அறிவிப்பு தவறானது.
இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பால் மாட்சிமை தங்கிய மாமன்னர் பெரும் வருத்தம் அடைந்திருக்கிறார்.
அரசாங்கத்தின் இந்த சொந்த முடிவு சட்டத்தை மதிக்கவில்லை.மேலும் மாமன்னரின் அதிகாரங்களை மீறி இருப்பதாகவும் இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles