
அவசரகால உத்தரவு மீட்டு கொள்ளப்பட்டது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பொய் உரைத்துள்ளது.
ஜூலை 21 ஆம் தேதி யோடு இந்த அவசர உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் அறிவித்தார்.
ஆனால் இந்த உத்தரவு மீட்டு கொள்வது தொடர்பில் மாமன்னரிடம் ஆலோசனை பெறவில்லை என்று இஸ்தான நெகாரா இன்று அறிவித்துள்ளது.
அந்த வகையில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்துள்ளது.
இதற்கு பொறுப்பேற்று பிரதமரும் அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.
