
பிரதமருக்கு 110 எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.
அப்படியானால் இதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க தயாரா என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்தார்.
துணை பிரதமருக்கு சட்டம் புரியும். உண்மையிலேயே பிரதமருக்கு 110 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்றால் அதை நாடாளுமன்றத்தில் பரிசோதிக்க வேண்டும்.
இவர் பகாங் மாநிலத்தைச் சேர்ந்தவர். மாமன்னரை அவமதித்த செயல் என்ன என்பது இவருக்கு புரியும்.
ஆகவே தைரியமிருந்தால் பிரதமருக்கு 110 எம்பிக்கள் இருக்கிறார்கள் என்பதை பரிசோதித்து பார்க்க தயாரா என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்தார்.
